Thursday, June 12, 2025

கண்ணன் பாமாலை - அசைந்தாடும் மயில் - Asainthaadum Mayil Ondru

அசைந்தாடும் மயில் - Asainthaadum Mayil Ondru

--------------

ராகம்சிம்மேந்த்ரமத்திமம்

இயற்றியவர் : ஊத்துக்காடுவேங்கடசுப்பையர்

-------

அசைந்தாடும் மயில் ஒன்று கண்டான் 

நம் அழகன் வந்தான் என்று 

சொல்வதுபோல் தோன்றும் (அசைந்தாடும்) 

 

இசைபாடும் குழல் கொண்டு வந்தான் கண்ணன் (இசைபாடும்)

இந்த ஏழேழு பிறவிக்கும் இன்பநிலை தந்தான்

 

திசைதோறும் நிறைவாக நின்றான் என்றும் திகட்டாத

வேணுகானம் ராதேயிடம் ஈர்ந்தன்

 

எங்காகிலும் எமதிறைவா இறைவா என

மனநிறை அடியவரிடம் தங்கு மனத்துடையான்

அருள் பொங்குமுகத்துடையான்

ஒரு பதம் வைத்து மறு பதம் தூக்கி

நின்றாட மயிலின் இறகாட மகர குழையாட

மதிவதனம்ஆட மயக்கும் விழி ஆட

மலரணிகள் ஆட மலர்மகளும் பாட

இது கனவோ நனவோ என மனநிறை

முனிவரும் மகிழ்ந்து கொண்டாட (அசைந்தாடும்)

 

அசைபோடும் ஆவினங்கள் கண்டு இந்த

அதிசயத்தில் சிலை போல நின்று

நிஜமான சுகமென்று ஒன்று இருந்தால்

ஏழுலகில் இதைஅன்றி வேறெதுவும் அன்று

இசையாறும் கோபாலன் நின்று இங்கு

எழுந்தெழுந்து நடமாட எதிர் நின்று ராதை பாட (எங்காகிலும்)||

No comments:

Post a Comment

முருகர் பாமாலை - ANJEL ANJEL INI KONJAMUM ANJEL - அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல்

ANJEL ANJEL INI KONJAMUM ANJEL அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல் ---------------------- இயற்றியவர் : அம்பூஜம் கிருஷ்ணாவின் ராக ம் : பைரவி...