ANJEL ANJEL INI KONJAMUM ANJEL
அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல்
----------------------
இயற்றியவர் : அம்பூஜம்
கிருஷ்ணாவின்
ராகம் : பைரவி
----------------------
அஞ்சு முகம் தோன்றின் ஆறுமுகம் தோன்றும்
வெஞ்சமரில் அஞ்சல் என வேல் தோன்றும் - நெஞ்சில்
ஒருகால் நினைக்கின் இரு காலும் தோன்றும்
முருகா என்று ஓதுவார் முன்
----------------------------
அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல்
அஞ்சுவோர்க்கு அபயம் அளிக்கும் சரவணன் இருக்க (அஞ்சேல்)
அனுபல்லவி:
வஞ்சக் கயவர், வல்வினைப் பிணியும்
சஞ்சல நெஞ்சமும் சற்றும் அஞ்சேல் (அஞ்சேல்)
வஞ்சக் கயவர், வல்வினைப் பிணியும்
சஞ்சல நெஞ்சமும் சற்றும் அஞ்சேல் (அஞ்சேல்)
சரணம்:
அஞ்சேல் என்று நீ அருளுடன் தந்த
வேல் அவனியில் என்தனை காக்கும் வேல்
அஞ்சேல் என்று நீ அருளுடன் தந்த
வேல் அவனியில் என்தனை காக்கும் வேல்
No comments:
Post a Comment