Thursday, June 12, 2025

முருகர் பாமாலை - கலியுக வரதன் கண்கண்ட - Kaliyuga Varathan Kankanda

 

கலியுக வரதன் கண்கண்ட - Kaliyuga Varathan Kankanda

--------------------

ராகம் : பிருந்தாவன சாரங்க

இயற்றியவர் : பெரியசாமி தூரன்

 -----------------------

கலியுக வரதன் கண்கண்ட தெய்வமாய் 

காட்சியளிப்பது பழனியிலே ||

 

மலைமகள் அருளிய சக்திவேல் முருகன் 

மரகத வண்ணனாம் திருமால் மருகன் ||

 

கண்ணுதற் கடவுளின் கண்மணியாய் வந்தான் 

கார்த்திகை பெண்டீர்கள் அணைப்பில் வளர்ந்தான் 

விண்ணவர் குறையெல்லாம் நொடியில் களைந்தான் 

வேண்டுவோர் வேண்டுமுன் வரமெல்லாம் தந்தான் ||

No comments:

Post a Comment

முருகர் பாமாலை - ANJEL ANJEL INI KONJAMUM ANJEL - அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல்

ANJEL ANJEL INI KONJAMUM ANJEL அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல் ---------------------- இயற்றியவர் : அம்பூஜம் கிருஷ்ணாவின் ராக ம் : பைரவி...