Tuesday, June 24, 2025

குரு வந்தனம் - கருணை ததும்பும் முகமொன்று – Karunai Thathumbum Mugamondru

 

என் மனதுதித்தவனே - En Manathuthithavane Thabo

---------------

இயற்றியவர் : ஸ்ரீ ஹரிதாஸ்கிரி ஸ்வாமிகள்

---------------

என் மனதுதித்தவனே, தபோ வனத்திருப்பவனே

என் உளத்தில் உனை ஒரு கனத்தில் நினைத்தால் அனைத்தும் தருபவனே

சினத்தை வென்றவனே, அறமெனும் தவத்தில் நிற்பவனே

இந்த ஜகத்தின் ஆண்டவனே, இகபர சுகத்தை தருபவனே

கிடைத்த தரியோனே, சிவலிங்க மதத்தில் உறைவோனே

எந்த இடத்தும் இருப்போனே, பவசங்கடத்தை அறுப்போனே

என் உளத்தில் உனை ஒரு கனத்தில் நினைத்தால், அனைத்தும் தருபவனே

 

அப்பனுக்கு, உபதேசம் செய்த ஞான, சுப்பனும் நீ தானோ?

அன்று முப்பிடி அவலை, முயன்று புசித்த, கண்ணப்பனும் நீ தானோ?

ஒப்பிலா மாமணியே, நீ இப்பவே வந்தருள்வாய்,

நீ இப்பவே வந்தருள்வாய்

உன்னை எப்பவும் போற்றிடுவேன், என் அப்பனே ஆண்டிட வா

என் உளத்தில் உனை ஒரு கனத்தில் நினைத்தால், அனைத்தும் தருபவனே

 

விரித்த சடையுடன், கறிதோலுரித்து, சிரித்து நின்றவன் நீ

உன் திரிபுரத்தை எரித்து, ஆறுமுகத்தை அளித்து,

என் உளத்தை பறித்தவன் நீ

என் மனதே புகுந்திடுவாய், உன் இருபதத்தை உகந்துடுவாய்

உன் இருபதத்தை உகந்திடுவாய்

அகம் எனும் மதத்தை ஓட்டிடுவாய், அம்பிகை பாதத்தை காட்டிடுவாய்

என் உளத்தில் உனை ஒரு கனத்தில் நினைத்தால், அனைத்தும் தருபவனே

 

உன் சித்தம் இறங்காதா, என் பித்தம் தெளியாதா

உத்தம குருநாதா, ஆண்டிடும் அத்தனே அருளீசா

எந்நாட்டவரும் போற்ற, இந்நாட்டினில் அவதரித்தாய்

என் மன ஆட்டமதை நிறுத்தி, மெய்ஞான நாட்டமுற செய்வாய்

தை கிருத்திகையில் உதித்தவா, என்னை திருத்தி அமைக்க வந்தவா

மங்கள புரிதனில் தோன்றியவா, பணியும் எங்களுக்கருள் செய்ய வா

என் உளத்தில் உனை ஒரு கனத்தில் நினைத்தால், அனைத்தும் தருபவனே

என் உளத்தில் உனை ஒரு கனத்தில் நினைத்தால், அனைத்தும் தருபவனே

 

குரு அருள் பெருகிடுமே, இருள் விலகிடுமே

சத்தகுரு பாதுகை ஆகிடும் நம் துணையாகவே

குரு அருள் பெருகிடுமே, இருள் விலகிடுமே

சத்குருதேவா ஞானானந்தா சரணம் சரணம் குருதேவா

சத்குருதேவா ஞானானந்தா சரணம் சரணம் குருதேவா

No comments:

Post a Comment

முருகர் பாமாலை - ANJEL ANJEL INI KONJAMUM ANJEL - அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல்

ANJEL ANJEL INI KONJAMUM ANJEL அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல் ---------------------- இயற்றியவர் : அம்பூஜம் கிருஷ்ணாவின் ராக ம் : பைரவி...