Sunday, June 22, 2025

குரு வந்தனம் - கருணை ததும்பும் முகமொன்று – Karunai Thathumbum Mugamondru

 

கருணை ததும்பும் முகமொன்று – Karunai Thathumbum Mugamondru

------------

பாடல் இயற்றியவர்திரு ஆனந்த் வாசுதேவன்

ராகம் : ஆபோகி

------------

கருணை ததும்பும் முகமொன்று கண்டேன்

அருணை அருகில் தபோவனம் அடைந்தேன்  

 ஸத்குரு ஞானானந்தர் பதமலர் பணிந்தேன்

அருள்வலையில் விழுந்து பேரானந்தம் அடைந்தேன் - (கருணை)

 

 திக்குத் தெரியாமல் திகைத்தவர்க்கு நல்வழி காட்டினார் 

சீரான மார்க்கம் தந்து நமைக் காத்து அருளினார்  

பக்தி நெறி பற்றிடும் நன்னெறியைப் புகட்டினார்

முக்தி நெறி நல்கிடும் வழி நமக்கு காட்டினார்        - (கருணை)

 

இன்முகம் கண்டால் மனக்கவலை பறந்திடும்    

பன்முகம் அறிந்தால் இருளங்கே விலகிடும்

இருளது விலகினால் திருவருள் தான் கிட்டிடும் 

திருவருள் கிட்டினால் சாந்தி அங்கே நிலவிடும்

No comments:

Post a Comment

முருகர் பாமாலை - ANJEL ANJEL INI KONJAMUM ANJEL - அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல்

ANJEL ANJEL INI KONJAMUM ANJEL அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல் ---------------------- இயற்றியவர் : அம்பூஜம் கிருஷ்ணாவின் ராக ம் : பைரவி...