Wednesday, December 31, 2025

குரு வந்தனம் - எந்த இடம் சென்றாலும் எந்த முகம் பார்த்தாலும் - ENTHA IDAM SENDRALUM ENTHA MUGAM PARTHALUM

எந்த இடம் சென்றாலும் எந்த முகம் பார்த்தாலும்
ENTHA IDAM SENDRALUM ENTHA MUGAM PARTHALUM
-----------------------
விருத்தம்
----------------
ஓதும் பல சாஸ்திரத்தின் உண்மை ஆய்ந்தே
உலக ஸுகம் துச்சமென உதறித் தள்ளி அந்த
ஆதிபரம் பொருளிற்கே இச்சை வைத்தே
அஷ்டாங்க யோகமுறை எட்டும் கற்று
நீதிநெறி வழுவாது நெறியினின்று நிலையான
ஸாயுஜ்யம் அடையும் மார்க்கம் நல்ல
போதனை செய்கின்ற மஹான் ஞானானந்தன்
ஸத்குருநாதன் ஞானானந்தன்
அவன் பொன்னடிகள் எந்நாளும்
சிந்தையில் வைப்போம்...
பாடல்
 
எந்த இடம் சென்றாலும் எந்த முகம் பார்த்தாலும்
எந்தனுக்கு தெரிவது உந்தன் முகமே - என்
சிந்தையிலே வந்த முகமே குருநாதன் முகமே
ஞானானந்த முகமே.
எந்தனுக்கு தெரிவது உந்தன் முகமே
என் சிந்தையிலே விளையாட வந்த முகமே
குருநாதன் முகமே - ஞானானந்த முகமே
 
அந்தரத்தில் விளையாடும் சந்திரனை கண்டாலே
ஸுந்தரமாய் தெரிவது உந்தன் முகமே - என்
சிந்தையிலே விளையாட வந்த முகமே
குருநாதன் முகமே ஞானானந்தன் முகமே.
கண்ணன் கதை கேட்டாலும் கந்தன் கதை கேட்டாலும்
கருத்தினில் நிலைப்பது உந்தன் முகமே - என்
சிந்தையிலே விளையாட வந்த முகமே
குருநாதன் முகமே ஞானானந்தன் முகமே.
எந்த பிழை நேர்ந்தாலும் எந்த நிலை வந்தாலும்
எந்தனுக்கு துணையாவது உந்தன் முகமே - எந்தன்
ஐயன் முகமே குருநாதன் முகமே ஞானானந்தன் முகமே
எந்த இடம் சென்றாலும் எந்த முகம் பார்த்தாலும்
எந்தனுக்கு தெரிவது உந்தன் முகமே.
குருநாதா ஸத்குருநாதா
ஸத்குருநாதா... குருநாதா
 
நாமாவளி
ஜய ஹோ! ஜய ஹோ! ஜய ஹோ!
ஜய ஸத்குருநாதா ஜய ஹோ!
ஸத்குருநாதா ஞானானந்தா
ஸத்குருநாதா ஞானானந்தா
ஜய ஹோ! ஜய ஹோ!
ஜய ஸத்குருநாதா ஜய ஹோ!

No comments:

Post a Comment

முருகர் பாமாலை - ANJEL ANJEL INI KONJAMUM ANJEL - அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல்

ANJEL ANJEL INI KONJAMUM ANJEL அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல் ---------------------- இயற்றியவர் : அம்பூஜம் கிருஷ்ணாவின் ராக ம் : பைரவி...