முத்துக்குமாரனடி அம்மா
Muthukumaranadi Amma
--------------
Muthukumaranadi Amma
--------------
முத்துக்குமாரனடி அம்மா அம்மா
செல்வ முத்துக்குமாரனடி அம்மா
முன்னை வினை தீர்த்திடுவான் அம்மா
மயில் மீது நடமாடி வருவான் முருகன்
மயல் கொண்டு அவனது மலரடி வணங்குவேன்
முத்துக்குமாரனடி அம்மா அம்மா
முன்னை வினை தீர்த்திடுவான் அம்மா அம்மா
வடிவேலை கைகொண்டு வருவான் முருகன்
வந்த வினை தீர்த்திடுவான் அம்மா அம்மா
கோழிக்கொடி கொண்டு வருவான் குமரன்
கொடிய வினைத்தீர்த்திடுவான் அம்மா அம்மா
முத்துக்குமாரனடி அம்மா அம்மா
முன்னை வினை தீர்த்திடுவான் அம்மா அம்மா
வண்ண மயில் மீதேறி வருவான் முருகன்
கன்னம் அதை தொட்டால் கையைப் பிடிப்பான்
கைவிட்டு விடுவாயோ என்றேன்
வண்ண மயில் மீதேறி வருவான் முருகன்
கன்னம் அதை தொட்டால் கையைப் பிடிப்பான்
கைவிட்டு விடுவாயோ என்றேன் எனை
கைவிட்டு விடுவாயோ என்றேன்
கையின் மேல் அடித்து கைவிடேன் என்றான் முருகன்
கையின் மேல் அடித்து கைவிடேன் என்றான்
முத்துக்குமாரனடி அம்மா அம்மா
முன்னை வினை தீர்த்திடுவான் அம்மா அம்மா
No comments:
Post a Comment