யாதுமாகி நின்றாய் - Yaathumaagi Ninrai Kaali
----------------
யாதுமாகி நின்றாய் - காளி!எங்கும் நீ நிறைந்தாய்தீது நன்மை யெல்லாம் - காளி!தெய்வ லீலை யன்றோ!பூதமைந்தும் ஆனாய் - காளி!பொறிக ளைந்தும் ஆனாய்போத மாகி நின்றாய் - காளி!பொறியை விஞ்சி நின்றாய்யாதுமாகி நின்றாய் - காளி!இன்பமாகி விட்டாய் - காளி!என்னுளே புகுந்தாய்பின்பு நின்னை யல்லால் - காளி!பிறிது நானும் உண்டோ?யாதுமாகி நின்றாய் - காளி!அன்பளித்து விட்டாய் - காளி!ஆண்மை தந்து விட்டாய்துன்பம் நீக்கிவிட்டாய் - காளி!தொல்லை போக்கிவிட்டாய்யாதுமாகி நின்றாய் - காளி!
எங்கும் நீ நிறைந்தாய்தீது நன்மை யெல்லாம் - காளி!தெய்வ லீலை யன்றோதெய்வ லீலை யன்றோயாதுமாகி நின்றாய் - காளி!
.jpeg)
No comments:
Post a Comment