பன்னிரு திருமுறை - பெரியபுராணம்
புனித மெய்க் கோல நீடு
புகலியார் வேந்தர் தம்மைக்
குனி சிலை புருவ மென்
பூங்கொம்பனார் உடனே கூட
நனி மிகக் கண்ட போதின்
நல்ல மங்கலங்கள் கூறி
மனிதரும் தேவர் ஆனார்
கண்இமையாது வாழ்த்தி
---------------
பெரியபுராணம் - 3136.
எம்பிரான் திருஞானசம்பந்தப் பெருமான், எம்பிராட்டி அன்னை தோத்திர பூர்ணாம்பிகை திருக்கலியாணம்.
------------------
தூய்மை செய்யும் மெய்க்கோலம் நீடிய சீகாழித் தலைவராகிய பிள்ளையாரை வளைந்த வில்லைப்போன்ற புருவங்களையுடைய மெல்லிய பூங்கொம்பு போன்ற தேவியாருடனே கூட மிக்க ஆர்வத்துடன் கண்டபோதில் நல்ல மங்கல வாழ்த்துக்களைச் சொல்லி கண்ணிமைக்காமல் பார்த்து வாழ்த்திய வகையினாலே மனிதர்களும் தேவர்களாயினார்கள்.
.jpeg)
No comments:
Post a Comment