Monday, June 23, 2025

ஐயப்பன் பாமாலை - காணிக்கை கொண்டு வந்தேன் - Kaanikkai Kondu Vanthen

 

காணிக்கை கொண்டு வந்தேன் - Kaanikkai Kondu Vanthen

-----------------
விருத்தம்
-----------------

மாயானுபூதியாலே உனை மறந்திருந்தேன் ஐயனே

மற்றஓருவன் இல்லையே உன் வம்ச வழியான தெய்வம் ஐயனே.

நீ என்னை ஆதரிகின்றனை என்று என் உள்ளம் தெளிவு கொண்டு உந்தன் சரண தூளியை எந்தன் சிரசின் மேல் அணிந்தேன் நிஜ பக்த பிரியநே காயம் புலி தலைவனே மாயானுபூதியாலே நான் கவலை கொண்டு கண்ட கண்ட இடமெல்லாம் சுற்றி அலைந்தேன் உனை தேடியே தாயான பூர்ண மகா ராஜா குமரா ஐயப்பா நிதி தந்து அருளும் இது சமயம் கருணா நிதி தந்து அருளும் இது சமயம்…

ஆரியங்காவய்யனே அச்சன் கோவில் அரசனே குளத்து புழை பாலகனே எரிமேலி சாஸ்தாவே சாஸ்தாவே மாமலை வாழும் ஐயப்பா தவ யோக சித்தாந்த சபரி

பீடாஸ்ரமஸ்தான மெய்ஞான குருவே ஐயப்பா..

-------------------

காணிக்கை கொண்டு வந்தேன் ஐயப்பா

கடை கண்ணால் பாருமைய்யா ஐயப்பா

எங்கள் கஷ்டங்களை தீர்குமய்யா ...

 

வேண்டி தொழுபவற்கே வேண்டும் வரம் கொடுப்பாய்

கண்னுக்கு இமைபோல் என்னை காத்துரஷித்துடுவாய் (காணிக்கை)

 

காணான வழிச்சுமையுடனே

நடந்து நடந்து உம்மை

காண மனதில் மிக

ஆசை கொண்டேன் காணவரதன்

ஐயப்பா ஐயப்பா

காணவரதன் திரு நாமத்தை

புகழ்ந்து பாடி அந்த

ஆனந்தமுடன் சன்னிதானம்

அடைவதற்கு தகதிதோம்

தகதிதோம் தகதிதோம்

காணவரதன் திரு நாமம்

அதைப் புகழ்ந்து அந்த

ஆனந்தமுடன் சன்னிதானம்

அடைவதற்கு             (காணிக்கை)

No comments:

Post a Comment

முருகர் பாமாலை - ANJEL ANJEL INI KONJAMUM ANJEL - அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல்

ANJEL ANJEL INI KONJAMUM ANJEL அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல் ---------------------- இயற்றியவர் : அம்பூஜம் கிருஷ்ணாவின் ராக ம் : பைரவி...