பச்சை பட்டாடை கட்டி - Pachai Pattadai Katti
-------------------
பச்சை பட்டாடை கட்டி
பரியின் மேல் ஏறி வரும்
பச்சை குழந்தை இவன் யாரய்யா
பார்த்தவர்கள் மயங்குறத பாரய்யா
இவன் யாரய்யா என்ன பேரையா
கோடி சூர்யன் போல் முகமும்
புன்னைகையுடன் கருணை விழியும்
வீரதிலகமுடன் வருகின்றார்
பாலன் இவன் யாரென்று கேளைய்யா
இவன் மாயனோ இல்லை சோமனோ
மால்மருகனோ என்று கேளைய்யா
இந்திரன் குடை பிடிக்க
சந்திர சூரியன் சாமரம் போட
பந்த பாசத்துடனே வருகின்றார்
விந்தையான பவனி இதை பாரய்யா
பூலோகமோ தேவலோகமோ
பூமாரியை பொழிவதை பாரய்யா
சரணம் சரணமே சரணமப்பா…
ஸ்வாமி சரணமே சரணமப்பா…
ஸ்வாமி சரணமே சரணமப்பா…
No comments:
Post a Comment