
சிவலோக நாதனைக்கண்டு – Sivaloga
Nathanai kandu
----------------
இயற்றியவர் : கோபாலகிருஷ்ண பாரதி
ராகம் : மயமாளவ
----------------
இயற்றியவர் : கோபாலகிருஷ்ண பாரதி
சிவலோக நாதனைக்கண்டு சேவித்திடுவோம் வாரீர்
பவபயங்களைப் போக்கி அவர் பரம பதத்தைக் கொடுப்பாரந்த - (சிவ)
அற்பசுகத்தை நினைந்தோம் அரன்திருவடி மறந்தோம்
கற்பிதமான ப்ரபஞ்சமிதைக் கானல் சலம்போலே யெண்ணி - (சிவ)
ஆசைக்கடலில் விழுந்தோமதால் அறிவுக்கறிவை யிழந்தோம்
பாசமகலும் வழிப்படாமல் பரிதவிக்கும் பாவியானோம் - (சிவ)
மானிடசன்மங் கொடுத்தார் தன்னை வணங்கக்கரங்க ளளித்தார்
தேனும்பாலும் போலே சென்று தேரடியில் நின்றுகொண்டு - (சிவ)
No comments:
Post a Comment